/ தினமலர் டிவி
/ பொது
/ திடீரென டெல்லியில் முகாமிட என்ன காரணம்? | PM Modi | Delhi | Chandrababu Naidu
திடீரென டெல்லியில் முகாமிட என்ன காரணம்? | PM Modi | Delhi | Chandrababu Naidu
ஆந்திரா மாநில அரசு கடுமையான நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது. நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் நிலை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். பல முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். மோடியிடம் ஆந்திரா மாநிலத்துக்கு வரி சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கேட்டதாக தெரிகிறது.
ஜூலை 04, 2024