உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறைக்குள் இருந்து கைதி செல்போனில் பேசியது எப்படி? | Prisoner Confession | Mobile video | Danger to

சிறைக்குள் இருந்து கைதி செல்போனில் பேசியது எப்படி? | Prisoner Confession | Mobile video | Danger to

கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியான 33 வயது ஏசுதாஸ் கடந்த வாரம் மர்மமான முறையில் இறந்தார். இந்த நிலையில் மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான விக்ரம், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லி சிறைக்குள் இருந்து வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடன் இருந்த கைதியை கொன்று விட்டார்கள். அடுத்தது நான் தான். தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சக கைதிகள் தான் காரணம் என 4 பேர் பெயரை குறிப்பிட்டு விக்ரம் பேசும் வீடியோ வைரலாகி உள்ளது. சிறைக்குள் இருக்கும் கைதிக்கு வீடியோ பதிவு செய்ய செல்போன் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை