பாலியல் குற்றவாளி பற்றி தகவல் தந்தால் ₹1 லட்சம்! Pune Rape Case accused | Maharashtra Politics| Pune
மகாராஷ்டிராவின் புனே மாநகரில் உள்ள ஸ்வர்கேட் பஸ் ஸ்டாண்டில் 2 தினங்களுக்கு முன் அதிகாலையில் 26 வயது இளம்பெண், பஸ்சுக்காக காத்திருந்தார். மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு, அந்த பெண் செல்ல வேண்டிய பஸ் வேறொரு இடத்தில் நிற்பதாக கூறி அழைத்துசென்றான். பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில், காலியாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு ஏசி பஸ்சை காட்டி ஏறிக்கொள்ள செய்தான். இளம் பெண் பஸ்சில் ஏறி உட்கார்ந்ததும், பின்னாலேயே அவனும் ஏறி கதவை லாக் செய்தான். இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினான். 13 தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த பெண் சொன்ன அடையாளங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டனர். அவன், புனேவை சேர்ந்த 37 வயதான தத்தாத்ரேய ராம்தாஸ் காடே என்பதும், அவன் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. அவனது பேட்டோவை வெளியிட்ட போலீசார், அவனை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.