150 ஏக்கரும் போச்சு: மொத்தமா மூழ்கிய காட்சி | Rain | Paddy | Rain Damage
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிடங்கல் கிராமத்தில் கனமழையால் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டது. வெள்ளம் வயலுக்குள் புகுந்து 150 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி நடவு பயிர்கள் மூழ்கிவிட்டது. இப்படியே விட்டால் பயிர்கள் அழுகி விடும் என விவசாயிகள் வேதனையுடன் சொல்கின்றனர். கடந்த பல மாதங்களாக வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. உடைப்பையாவது பொதுப்பணிதுறை சீரமைத்து தர வேண்டும் என கேட்கின்றனர்.
நவ 27, 2024