உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடுகிறது போலீஸ்! | Ration Rice seized | Dindigul | Rice Smuggling

அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடுகிறது போலீஸ்! | Ration Rice seized | Dindigul | Rice Smuggling

திண்டுக்கல் வழியாக திருப்பூருக்கு பெருமளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. திண்டுக்கல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். லாரி டிரைவர் விக்னேஷ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக கடத்தல் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தேனியில் இருந்து திருப்பூருக்கு ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. 365 பைகளில் 50 கிலோ எடை கொண்ட 18,250 கிலோ பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் 1050 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை