/ தினமலர் டிவி
/ பொது
/ RCB கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்; 11 பேர் மரணம் Rcb victory | Bangalore stadium |stampede-deaths|
RCB கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்; 11 பேர் மரணம் Rcb victory | Bangalore stadium |stampede-deaths|
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று இரவு ஆமதாபாத்தில் நடந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றதால் கர்நாடகா முழுவதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கோப்பையுடன் பெங்களூரு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இன்று மாலை சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, சின்னசாமி ஸ்டேடியம் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ஸ்டேடியத்துக்கு உள்ளே வெற்றிக்கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் வெளியே கூட்ட நெரிசலில் பலர் சிக்கினர்.
ஜூன் 04, 2025