/ தினமலர் டிவி
/ பொது
/ திருடப்பட்ட குடவாசல் தீபநாயகர் சிலை ₹2.54 கோடிக்கு விற்பனை | Retired I.G Pon Manickavel | Kudavasal
திருடப்பட்ட குடவாசல் தீபநாயகர் சிலை ₹2.54 கோடிக்கு விற்பனை | Retired I.G Pon Manickavel | Kudavasal
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் திருவாரூர் மாவட்டம் குடவாசல் போலீசில் புகார் ஒன்று அளித்தார். குடவாசல் அடுத்த தீபங்குடி தீபநாயகர் கோயிலில் இருந்த தீப நாயகர் சுவாமியின் செப்புதிருமேனி சிலை 2003ல் திருடு போனது. இந்த சிலை கடைசியாக நியூயார்க்கில் ராஜு சவுத்ரி என்பவரிடம் ஏலம் மூலம் 2 கோடியே 54 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தி புகார் அளித்ததாக பொன் மாணிக்கவேல் கூறினார்.
அக் 18, 2024