/ தினமலர் டிவி
/ பொது
/ மண்ணுக்குள் புதைந்த 1500 ஆண்டு பழமையான கோயில் கண்டுபிடிப்பு | Salem Vinayagar Temple | Idol Recovere
மண்ணுக்குள் புதைந்த 1500 ஆண்டு பழமையான கோயில் கண்டுபிடிப்பு | Salem Vinayagar Temple | Idol Recovere
சேலம் உத்தம சோழபுரத்தில் உள்ளது பழமை வாய்ந்த கரபுரநாதர் கோயில். இக்கோயிலில் ஔவையார் சிலை உள்ளது. இங்கு ஔவையார் சிலை வர காரணம், 1500 ஆண்டுகளுக்கு முன் ஔவையார் இந்த ஊரில் இருந்த வித்தகர் விநாயகர் கோயிலில் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. அவர் எழுதிய பாடல் மூலமாக இது தெரிய வருவதாகவும், ஔவையார் இந்த கோயிலில் தான் முக்தியடைந்து இருக்கலாம் எனவும் ஊர் மக்கள் நம்புகின்றனர். திருமணி முத்தாற்றின் ஓரமாக அமைந்திருந்த அந்த கோயில் காலப்போக்கில் மண்ணில் புதைந்ததாக சிலர் கூறினர். பசுமை தமிழகம் என்ற அமைப்பினர் கோயிலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆக 27, 2024