உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளை கபளீகரம் செய்யும் கடல்; ரோட்டுக்கு வந்த மீனவர்கள்

வீடுகளை கபளீகரம் செய்யும் கடல்; ரோட்டுக்கு வந்த மீனவர்கள்

கன்னியாகுமரி நாகர்கோவில் அடுத்த புத்தன் துறை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக, 12க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்தன. மீனவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதி அடைந்தனர். தங்களின் கஷ்டங்களை பலமுறை சொல்லியும் அரசு கண்டுகொள்ளவில்லை என கண்டித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கடல் சீற்றம், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜூலை 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 24, 2025 03:55

என்னம்மா சொல்லுறீங்க?. மருத்துவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லியும், அந்த ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, மருத்துவமனையில் இருந்து "அப்பா" கடுமையாக அறுத்துத் தள்ளும் பொழுது ஸாரி உழைக்கும் பொழுது உங்கள் பிரச்சினையை அறுத்துத் தள்ள ஸாரி தீர்த்து வைக்க மாட்டாரா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை