வீடுகளை கபளீகரம் செய்யும் கடல்; ரோட்டுக்கு வந்த மீனவர்கள்
கன்னியாகுமரி நாகர்கோவில் அடுத்த புத்தன் துறை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக, 12க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்தன. மீனவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதி அடைந்தனர். தங்களின் கஷ்டங்களை பலமுறை சொல்லியும் அரசு கண்டுகொள்ளவில்லை என கண்டித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கடல் சீற்றம், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஜூலை 23, 2025