வாங்சுக்கின் அமைப்புக்கு இனி வெளிநாட்டு நிதி கிடைக்காது Sonam Wangchuck Atrested| ladakh mob violen
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவருக்கு ஆதரவாக இளைஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. பாஜ அலுவலகத்துக்கும், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரத்தை அடக்கினர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். லடாக் கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சகம், அவரது அமைப்பு வெளிநாட்டு நிதிபெறும் பதிவை ரத்து செய்தது. இதற்கு பதிலளித்த வாங்சுக், வன்முறைக்கு நான் பலியாக்கப்படுகிறேன், எப்போது என்னை கைது செய்தாலும் மகிழ்ச்சி தான் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று சோனம் வாங்சுக் பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்த நிலையில், போலீசார் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உண்ணாவிரத களத்தில் இருந்த போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் தூண்டிவிட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #ActivistSonamWangchuk #LadakhViolence #ProvokedMob #CentreOnLadakh #JusticeForLadakh #PeaceInLadakh #SonamWangchuk #HumanRights #ProtestsInLadakh