அதிகாலை வீட்டுக்கு வந்ததும் அலறிய பேத்தி | Talavadi | Erode
இங்குள்ள தொட்டகாஜனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலி வேலைக்கு செல்கின்றனர். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மூத்த மகன் ராகவன், வயது 11. அங்குள்ள சூசைபுரம் அரசு பள்ளியில் படிக்கிறார். மகள் அமிர்தா, வயது 9. சனியன்று இரவு ராகவன் அவரது பாட்டி சிக்கம்மா வீட்டில் தூங்கியுள்ளார். வழக்கம் போல காலையில் அங்கு போன பேத்தி அமிர்தா அதிர்ச்சி அடைந்தார். அங்கே அண்ணன் ராகவன், பாட்டி சிக்கம்மா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். பதறிப்போன சிறுமி அமிர்தா அதிர்ச்சியில் சத்தமாக கத்தி அழுத்துள்ளார்.
ஏப் 13, 2025