உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை! | Tamil Nadu DGP | Helmet | High Court

வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை! | Tamil Nadu DGP | Helmet | High Court

தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுக்கு 40 சதவீதம் பேர், பைக் விபத்தில் இறக்கின்றனர். இதனால், பைக் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின் இருக்கையில் இருப்பவரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. டிராபிக் போலீசார் ஹெல்மெட் விதிமீறலுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். வக்கீல் கே.கே.ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் ஹெல்மெட் கட்டாயம் என்பதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனபொது நல வழக்கு தொடர்ந்தார். விசாரித்த கோர்ட், அரசு வெறும் உத்தரவு போட்டால் மட்டும் போதாது என அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை