மின்னொளியில் தகதகவென ஜொலிக்கும் பெரியகோயில்
ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது சதய விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரிய கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இரவில் மின்னொளியில் கோயில் ஜொலித்தது. நேற்றைய நிகழ்ச்சியில் மாமன்னன் ராஜராஜ சோழன் விஜயம் என்ற பெயரில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பழங்கால இசை கருவிகள் இசைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 700க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் கந்து கொண்டனர்.
நவ 10, 2024