ரோடா? வாய்க்காலா? 10 வருடமாக கிராம மக்கள் அவஸ்தை | Thiruvarur district roads | Puzhuthikudi village
#ThiruvarurRoads #ThiruthuraipoondiPotholes #PuzhuthikudiVillage #Sabapadipuram #RuralRoadCrisis #TamilNaduInfrastructure #StudentCommute #PotholeNightmare #KotturUnion #FixOurRoads திருவாரூர் மாவட்டம், புழுதிக்குடி அடுத்துள்ளது சபாபதிபுரம் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கே 10 ஆண்டுகளுக்கு முன் ரோடு போடப்பட்டது. இப்போது ரோடு இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டும், குழியுமாக சேறு நிறைந்து காணப்படுகிறது. சபாபதிபுரம் வரும் வாகனங்கள் ஊருக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாகவே நிறுத்தப்படுகின்றன. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் அழைத்தால் கூட வருவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு கிலோமீட்டர் ரோடு போட அரசுக்கு இவ்வளவு தயக்கம் ஏன் என கேட்கின்றனர் கிராம மக்கள்.