கோயில் பேனரில் கை வைத்த போலீசை ஓட விட்ட மக்கள் | Tirupur | temple Banner
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் பொங்கல் விழா நடக்க உள்ளதை முன்னிட்டு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. அவை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என கூறி போலீசார் விளம்பர போர்டுகளை அகற்ற முயன்றனர். அவர்களை தடுத்த கோயில் நிர்வாகிகள் போர்டுகளை அகற்ற கூடாது என வாக்குவாதம் செய்தனர். கோயில் போர்டை அகற்றும் நீங்கள் தைரியம் இருந்தா அருகில் உள்ள திமுக கட்சி பேனர் மீது கை வைங்க பார்க்கலாம் என ஆவேசமாக பேசினர்.
பிப் 26, 2025