/ தினமலர் டிவி
/ பொது
/ ரயில் விபத்து நடந்த இடத்தை அலசும் NIA அதிகாரிகள் | Train accident | Kavaraipettai Train
ரயில் விபத்து நடந்த இடத்தை அலசும் NIA அதிகாரிகள் | Train accident | Kavaraipettai Train
திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மைசூரில் இருந்து வந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கவரப்பேட்டை அருகே நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயிலின் பெட்டி உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகளில் தீ பிடித்தது. எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 1,650 பயணிகள் இருந்துள்ளனர். நல்ல வேளையாக உயிர் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அக் 12, 2024