/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக தொழிலாளர்கள் 4 பேரின் அடையாளம் தெரிந்தது | Train accident | Palakkad | Kerala Express
தமிழக தொழிலாளர்கள் 4 பேரின் அடையாளம் தெரிந்தது | Train accident | Palakkad | Kerala Express
கேரளாவின் பாலக்காடு அருகே பாரதபுழா ஆற்றின் மீது அமைந்துள்ள ஷோரனூர் ரயில் பாலத்தில் இன்று மதியம் ஒப்பந்த தொழிலாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டில்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரளா எக்ஸ்பிரஸ் அந்த தண்டவாளத்தில் வந்தது. உடனடியாக தண்டவாளத்தில் இருந்து வெளியேற முடியாமல் 4 பேர் சிக்கி கொண்டனர். ரயில் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேரும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அனைவரும் இறந்தனர்.
நவ 02, 2024