திருச்சி காவிரி பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதி |Trichy Cauvery Bridge | Bridge damage
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் - மாம்பழச்சாலை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 600 மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைந்துள்ளது. 1976ல் கட்டப்பட்ட இந்த காவிரி பாலம் பழுதடைந்ததால், 2015ல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல் தடுப்பு சுவர் அமைத்து சீரமைத்தனர். மீண்டும் 2018ல் பழனிசாமி முதல்வராக இருந்தபோது 35 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர்களுக்கு பதிலாக இரு முனைகளிலும் சிமென்ட் கான்கீரிட் போடப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் 15 லட்சம் ரூபாய் செலவில் பாலத்தின் மூட்டுகள் வலுப்படுத்தப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சியின்போது 2022ல் பாலம் பழுதடைந்ததால் செப்டம்பரில் பாலம் மூடப்பட்டு 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து 2023 மார்ச்சில் காவிரி பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.