/ தினமலர் டிவி
/ பொது
/ வலி தாங்க முடியலம்மா: கதறிய மாணவி: நடந்தது என்ன? | pocso act | Viluppuram government school
வலி தாங்க முடியலம்மா: கதறிய மாணவி: நடந்தது என்ன? | pocso act | Viluppuram government school
விழுப்புரம் நகரில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 1000க்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். 6ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பால் வின்சென்ட் நேற்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேரும் நேற்று மாலையே தலைமை ஆசிரியை சசிகலாவிடம் புகார் மனு அளித்தனர். அவர் இந்த புகார் மனுவை குழந்தைகள் நலக்குழுவுக்கு அனுப்பி வைத்து விசாரிக்க கேட்டுக் கொண்டார். அதற்குள் வீட்டுக்கு சென்ற மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறினர்.
ஆக 29, 2025