/ தினமலர் டிவி
/ பொது
/ நிவாரணம் அறிவித்தும் தொடர்கிறது ஆர்ப்பாட்டம் | Virudhunagar cracker factory | CM Stalin
நிவாரணம் அறிவித்தும் தொடர்கிறது ஆர்ப்பாட்டம் | Virudhunagar cracker factory | CM Stalin
விருதுநகர், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் கமல்குமாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 50 அறைகளில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்தனர். காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 8 அறைகள் தரைமட்டமாகின. உள்ளே பணியில் இருந்த மகாலிங்கம் , செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி , புண்ணிய மூர்த்தி, ராமஜெயம், நாகபாண்டி, வைரமணி ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட லிங்குசாமி , மணிகண்டன் , கருப்பசாமி, முருகலட்சுமி, அழகுராஜா ஆகியோர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.
ஜூலை 01, 2025