நிலச்சரிவுக்கு இரையான காளிதாஸ் குடும்பம் கதறல் | Wayanad | Wayanad LandSlide
வந்துருவேன்னு சொல்லிட்டு போனாங்க! அண்ணனை இப்படியாங்க பார்க்கணும்? கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் 150க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் உடல்கள் மண்ணில் புதைந்தது. பேரிடர் ஏற்பட்ட பகுதியில் ராணும், தீயணைப்பு துறையினர், உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய உடல்கள் கயிறு கட்டி மீட்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த காளிதாஸ் என்பவரும் வயநாடு நிலச்சரிவில் இறந்துள்ளார். கட்டிட வேலைக்காக வயநாடு சென்ற அவர் அங்கிருந்த உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது நிலச்சரிவில் சிக்கி இறந்தார். அவரது வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த குடும்பம் சோகத்தில் உறைந்துள்ளது.