வயநாடு கலெக்டர் சொன்ன அப்டேட் | Wayanadu | Kerala | Landslide Disaster
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி நடக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்கள் கடைசியாக இருந்த இடத்தை மொபைல் போன் டவர் மூலம் கண்டறிந்து வருவதாக வயநாடு கலெக்டர் மெகா ஸ்ரீ தெரிவித்துள்ளார். ட்ரோன் மூலம் எடுத்த போட்டோக்களை வைத்து, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப உதவியுடன், யார் யார் எங்கெங்கு இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்து அந்த இடங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த உள்ளோம். அந்த போட்டோக்களை மீட்பு குழுவுக்கும் அளித்து, அதில் குறிக்கப்பட்டுள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளோம். இனி மீட்புப் பணி துல்லியமாகவும், வேகமாகவும் நடக்கும்.
ஆக 03, 2024