உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலினுக்கு உண்மை தெரியும்! சிபிஐ விசாரணை வேண்டும் | Anbumani | PMK | Quarries | Mining | CM Stalin

ஸ்டாலினுக்கு உண்மை தெரியும்! சிபிஐ விசாரணை வேண்டும் | Anbumani | PMK | Quarries | Mining | CM Stalin

பாமக தலைவர் அன்புமணியின் அறிக்கை; கேரளாவில் மணல், ஜல்லி, எம்சாண்ட் குவாரிகளுக்கு தடை விதித்து இயற்கை வளத்தை பாதுகாக்கின்றனர். ஆனால் தமிழகத்திலிருந்து அவை சட்டவிரோதமாக அங்கு கடத்தப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் உரிமம் பெற்ற மற்றும் சட்டவிரோத குவாரிகள் அதிக அளவில் செயல்படுகின்றன. கனிமவள கொள்ளையில் ஈடுபடுவோர், திமுக மற்றும் அதன் அனுதாபிகள் என்பதால் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. தென் மாவட்ட கனிமவள கொள்ளைக்கு காட்பாதராக ஆளும்கட்சி பெரும்புள்ளி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை பகைத்து கொள்ளும் சுரங்க அதிகாரிகள், கலெக்டர்கள் யாரும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பணி செய்ய முடியாது என வெளிப்படையாகவே கூறப்படுகின்றன. ஆனாலும் திமுக அரசு மவுனம் காக்கிறது. தென் மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளையின் மதிப்பு 1,000 கோடிக்கும் அதிகம். இந்த உண்மைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். ஏதோ காரணத்திற்காக நடவடிக்கை எடுக்காமல் அந்த காட் பாதரை பாதுகாக்கிறார். அவரும் பதிலுக்கு விசுவாசம் காட்டுகிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு கனிமவள கொள்ளையர்களுக்கு துணை போவதை சகித்து கொண்டிருக்க முடியாது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் பாமக சார்பில் போராட்டம் நட த்தப்படும் என கூறி உள்ளார். #Anbumani | #PMK | #Quarries | #Mining | #CMStalin | #DMK

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை