உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அருணாச்சலில் 912 அடி உயரத்தில் அணை கட்டுகிறது இந்தியா | Arunachal | Tibet | Brahmaputra | China Dam

அருணாச்சலில் 912 அடி உயரத்தில் அணை கட்டுகிறது இந்தியா | Arunachal | Tibet | Brahmaputra | China Dam

₹17000 கோடியில் அணை சீனா சவாலுக்கு இந்தியா செக்! சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. இதன் எல்லையில் அருணாச்சல பிரதேசம் அமைந்துள்ளது. திபெத்தில் உருவாகும் யார்லுங் சாங்போ நதி, பிரம்மபுத்திரா என்ற பெயரில் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக பாய்ந்து வங்கதேசத்தை அடைந்து இறுதியில் கடலில் கலக்கிறது. இந்த சூழலில் யார்லுங் சாங்போ நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டும் பணியை சீனா கடந்த ஜூலையில் துவங்கியது.  15 லட்சம் கோடியில் கட்டப்படும் இந்த அணை, ஐந்தடுக்கு நீர்மின் நிலையங்களுடன் அமைகிறது. இத்திட்டத்தால் பிரம்ம புத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும். அவசர காலங்களில் அதிகளவில் நீரை வெளியேற்றினால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பணிகளை மேற்கொள்ளும்படியும் மத்திய அரசு சீனாவிடம் வலியுறுத்தியது. இதை சீனா கண்டுகொள்ளவில்லை. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் மாவட்டத்துக்கு சென்ற ஆண்டு சென்ற பிரதமர் மோடி 2,880 மெகாவாட் திறனில் ஒரு பெரிய நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த அணை கட்டும் பணியை, தேசிய நீர்மின் கழகம் மேற்கொண்டு வருகிறது. திபாங் நதியின் குறுக்கே, 912 அடி உயரத்தில் மிகப்பெரிய அணை கட்டும் பணியை தேசிய நீர்மின் கழகம் துவங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 11,223 மில்லியன் யூனிட் மின் சாரம் உற்பத்தி செய்யப்படும். அணை கட்ட 17 ஆயிரம் கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. திபெத்தில் சீனா அணை கட்டுவதை எதிர்கொள்ளவும், அந்நாடு திடீரென நீரை வெளியேற்றினால் நம் நாட்டில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்கவும், இந்த அணையை மத்திய அரசு கட்டுகிறது. வரும் 2032க்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ