/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வட மாநில தொழிலாளிகள் போர்வையில் சட்ட விரோத குடியேற்றம் | Illegal immigration | Bangladeshi Arrest
வட மாநில தொழிலாளிகள் போர்வையில் சட்ட விரோத குடியேற்றம் | Illegal immigration | Bangladeshi Arrest
நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் பற்றிய கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நுழைந்து, இங்கேயே தங்கியுள்ள வங்கதேசத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதன்படி உபி மதுராவில் சட்ட விரோதமான முறையில் வங்கதேசத்தினர் பலர் வசிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்று காஜ்பூர் பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது வங்கதேசத்தினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல் கோவையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.
மே 17, 2025