/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாஷா மரணம்: கோவை முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு | Basha | Al ummah founder
பாஷா மரணம்: கோவை முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு | Basha | Al ummah founder
கோவையில் 1998 பிப்ரவரி 14ல் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. காந்திபுரம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், ஆர்எஸ்புரம் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் பலியான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது அல்-உம்மா அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அமைப்பின் தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அல்-உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாஷா உள்ளிட்ட 30 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
டிச 16, 2024