உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்டுக்கடங்காத அட்ராசிட்டியில் தெலுங்கு தேசம் MLAக்கள் | Chandrababu | Andhra CM | Telugu desam

கட்டுக்கடங்காத அட்ராசிட்டியில் தெலுங்கு தேசம் MLAக்கள் | Chandrababu | Andhra CM | Telugu desam

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு ஆட்சியை பறித்து, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்களின் சட்டவிரோத செயல்பாடுகள் அவருக்கு தொடர் தலைவலியாக மாறி உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, மணல் கடத்தல், சட்டவிரோத மதுபான கடைகள், ரியல் எஸ்டேட் மோசடிகள் என தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்கள், சந்திரபாபு நாயுடுவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. ஆட்சி அமைந்த ஓராண்டில் மட்டும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது 6 புகார்கள் பதிவாகி உள்ளன. ஸ்ரீசைலம் தொகுதி எம்.எல்.ஏ வெங்கல் ரெட்டி, தனது வாகனத்தை சோதனை செய்த வனத்துறை அதிகாரிகளை தாக்கியது ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. ஸ்ரீகாகுளம் எம்.எல்.ஏ ரவி மீது கல்லுாரி முதல்வர் பாலியல் புகார் அளித்தார். குண்டூர் மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர் மீதும் இதே குற்றச்சாட்டு உள்ளது. கிருஷ்ணா மாவட்ட எம்.எல்.ஏ சீனிவாஸ், ரியல் எஸ்டேட் தகராறில் அரசு கட்டடம் ஒன்றை இடிக்க சொன்னது, ஆளும் தெலுங்கு தேச கூட்டணிக்கு தலைவலியாக மாறியது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், முதல்வர் குடும்பத்துக்கு உள்ளேயே குழப்பத்தை விளைவிக்கும் வகையில், சில சம்பவங்கள் அரங்கேறிஉள்ளன. சந்திரபாபுவின் உறவினரும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிராக அனந்தபூர் மாவட்ட எம்.எல்.ஏ டகுபதி பிரசாத் கிளம்பி இருப்பது, சந்திரபாபுவை உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு தள்ளிஉள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் பற்றி வாய்க்கு வந்தபடி அவர் பேச, பதிலுக்கு டகுபதியின் உருவ பொம்மையை ரசிகர்கள் எரிக்க, அனந்தபூர் மட்டுமின்றி ஆந்திராவே பற்றி எரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிராக டகுபதி கிளம்பியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க சந்திரபாபு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. துணை முதல்வராக உள்ள ஜனசேனா தலைவர் பவன் கல்யாணும் கூட, தன் கட்சி எம்.எல்.ஏக்களால் மன நிம்மதியை இழந்துள்ளார்.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !