சட்டசபை முடிந்த 5 நாட்களில் அதிரடி காட்டிய கவர்னர் அர்லேகர்!
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடந்தன. அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். கூட்டத்தொடர் செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைந்தது. கடைசி நாட்களில் மொத்தம் 13 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
செப் 18, 2026