/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பயங்கரவாதத்தை ஏவி விடும் பாக் தலையில் ஜெய்சங்கர் குட்டு | Jaishankar Warning to Pakistan
பயங்கரவாதத்தை ஏவி விடும் பாக் தலையில் ஜெய்சங்கர் குட்டு | Jaishankar Warning to Pakistan
சென்னை ஐஐடியில் சாஸ்த்ரா 2026 தொழில் நுட்ப திருவிழா இன்று துவங்கியது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விழாவை துவக்கிவைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அண்டை நாடுகளுடனான வெளியுறவு கொள்கை குறித்து அப்போது அவர் கூறியதாவது நாம் பலவிதமான அண்டை நாடுகளுடன் உறவை பேணி வருகிறோம். ஒரு நாடு நமக்கு நல்ல நாடாக இருந்தால், குறைந்தபட்சம் தீங்கு விளைவிக்காத நாடாக இருந்தால் அந்த நாட்டுக்கு நாம் உதவ வேண்டும். அந்த நாட்டுடன் அன்புடன் இருக்கவும் வேண்டும்.
ஜன 02, 2026