டில்லி சென்றுள்ள ஓபிஎஸ், பாஜ தலைவர்களையும் சந்திக்க முடிவு? | O.Panneerselvam | Delhi visit | BJP |
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக-பாஜ கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க, அதிமுகவின் பழனிசாமி மறுத்து விட்டார். இதனால் பாஜ கூட்டணியில் இருந்து இருவரும் விலகினர். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றியுள்ளார். கடந்த ஒரு வாரமாக, கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம், திடீர் பயணமாக கொச்சியில் இருந்து டில்லி சென்றுள்ளார். இதுகுறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்கவும், சட்ட ஆலோசனை பெறவும் டில்லி சென்றுள்ளார். பாஜ தலைமைக்கு நெருக்கமான, ஆடிட்டர் குருமூர்த்தியும் டில்லி சென்றுள்ளார். இதனால் பாஜ முக்கிய தலைவர்கள் சிலரை, பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என அவர்கள் கூறினர். தவெகவுடன் கூட்டணி சாத்தியம் இல்லை என்பதால், பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை கூட்டணியில் சேர்க்க, பாஜ தலைமை வலியுறுத்துவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். #O.pannerselvam #ops #eps #admk #delhivisit #auditorgurumoorthi #modi #amitshah #tnelection #newparty #electioncommission #opsdelhivisit