/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / என்ன நடந்தது ஸ்டேஷனில்? பல்லடம் சம்பவத்தில் பரபரப்பு | Palladam | Tirupur SP Office                                        
                                     என்ன நடந்தது ஸ்டேஷனில்? பல்லடம் சம்பவத்தில் பரபரப்பு | Palladam | Tirupur SP Office
திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் நவம்பர் 29ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில் குமார் என மூன்று பேரின் கொலை தமிழகத்தை உலுக்கியது. கொலை நடந்த இடத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றவுக்குள் எங்கும் சிசிடிவி கேமரா இல்லை என்பதால் கொலையாளிகளை பிடிக்க போலீசார் திணறுகின்றனர். 14 தனி படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் துப்பு கிடைக்கவில்லை.
 டிச 16, 2024