என் உயிருக்கு என்ன ஆனாலும் மாமனார் தான் காரணம் | Williams | Anandhan's son in law | BSP | Shocking
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு மிக கோரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏராளமானோர் அடுத்தடுத்து கைதானாலும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் இறந்ததுமே, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பின் பொற்கொடி கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்த பொற்கொடி, என்னை யாரும் நீக்கவில்லை; எல்லாம் மாநில தலைவர் ஆனந்தன் செய்த வேலை என பரபரப்பு பேட்டி அளித்தார்.