ரவுடியை பழிக்கு பழி வாங்கிய கும்பல்: பரபரப்பு தகவல் | Salem | Rowdy | Murder Case
salem rowdy saravanan dies mob attacks with sword salem police crime tension in salem சேலம் வலசையூர் வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பட்டறை சரவணன் 45. ரவுடி. பீரோ தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தார். . வழக்கம்போல இன்று காலை 8:30 மணியளவில் காரில் பட்டறைக்கு சரவணன் கிளம்பினார். அரூர் தேசிய நெடுஞ்சாலையில் பனந்தோப்பு அருகே சென்றபோது மர்ம நபர்கள் காரை வழி மறித்தனர். மர்ம நபர்களின் கைகளில் அரிவாள் இருப்பதை பார்த்ததும் சரவணன் அதிர்ச்சியடைந்தார். சுதாரிப்பதற்குள் ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்தனர். சரவணனை ரோட்டில் இழுத்து போட்டனர். சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தலை, முகம் உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது. சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்