/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சிவகாசியில் தாய் மகனுக்கு சோக சம்பவம்! | Sivakasi | Heavy Rain | Sivakasi Police
சிவகாசியில் தாய் மகனுக்கு சோக சம்பவம்! | Sivakasi | Heavy Rain | Sivakasi Police
கணவர் கணேசனுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 5 வயது மகன் தர்ஷனுடன் தந்தை முத்தையா வீட்டில் வசித்து வந்தார். முத்தையா வீட்டின் பக்கத்தில் வீட்டு கட்டுமான பணி நடந்து வந்தது. கழிவு நீர் தொட்டிக்காக 8 அடி பள்ளம் தோண்டப்பட்டதில் தொடர் மழை காரணமாக நீர் நிரம்பி தேங்கியிருந்தது. சிறுவன் தர்ஷன் பள்ளம் இருப்பது தெரியாமல் அதனுள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. மகனை காணாமல் தேடி வந்த ராஜேஸ்வரி தர்ஷனை காப்பாற்ற முயன்று அவரும் வெளியேர முடியாமல் மூழ்கி இறந்துள்ளார். தாய், மகன் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிவகாசி நகர் போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
டிச 14, 2024