மேலும் செய்திகள்
செல்லங்களுக்கும் வரலாம் சுகர்
23-May-2026
கோவையில் இன்று செல்லப்பிராணிகள் திருவிழா
23-May-2026
வினோதமான வெளிநாட்டு செல்லப்பிராணிகள்
16-May-2026
தண்ணீரில் மிதக்கும்
16-May-2026
கோவையில் செல்லப்பிராணிகள் திருவிழா
16-May-2026
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவு திட்டமான விலங்குகளுக்கான நாட்டின் மிகப்பெரிய மற்றும் பிரத்யேக மருத்துவமனை மும்பையில் விரைவில் திறப்பு விழா காண தயாராக உள்ளது. சுமார் 2.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.165 கோடி செலவில், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை இம்மருத்துவமனை கொண்டுள்ளது. இப்போதைக்கு நாய்கள், பூனை, முயல் மற்றும் பிற சிறிய விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதில், 200 நோயாளிகள்(விலங்குகள்) தங்கும் வசதி உள்ளது.செல்லப்பிராணிகள் நம் குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து, இப்பிராணிகள் வேறுபட்டதல்ல. எனது வாழ்நாளில் ஏராளமான செல்லப்பிராணி களின் பாதுகாவலராக இருந்ததால், இந்த மருத்துவமனை கட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்'' என்கிறார் விலங்கு பிரியரான, 86 வயது ரத்தன் டாடா. ரோட்டில் காயமடைந்த, கைவிடப்பட்ட நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளின் அவஸ்தையை பார்த்து மனமுடைந்த இவருக்கு, இப்படிப்பட்ட மருத்துவமனையை எழுப்பும் எண்ணம் உதித்தது குறிப்பிடத்தக்கது.
23-May-2026
23-May-2026
16-May-2026
16-May-2026
16-May-2026