பச்சைக்கிளிகள் தோளோடு
ராஜஸ்தானுக்கே உண்டான வறண்ட மணலும், வெப்பமான காற்றும் நிறைந்த ஊர்களில் ஒன்றுதான் பிகானீர்.அங்கு சில சமயம் வெப்பம் 45 டிகிரியைக்கூடத் தாண்டி தகிக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் மட்டுமே அமுதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்.அந்த தண்ணீர் கிடைக்காமல் பறவையினங்கள் பாடய்பாடும் .அந்த ஊரில் மற்ற பறவைகளை விட கிளிகள் அதிகம். சில கிளிகள் உஷ்ணம் தாங்காமல் மயங்கிவிழும்,சில கிளிகள் மயங்கிப் போன நிலையில் எங்கே அமர்கிறோம் என்பது தெரியாமல் மின் கம்பிகளில் அடிபட்டு விழும்.