உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / குவிந்தனர் பக்தர்கள் அதிர்ந்தது வடபழநி

குவிந்தனர் பக்தர்கள் அதிர்ந்தது வடபழநி

இதுவரை இல்லாத அளவில் இந்த தைப்பூசத்திருவிழாவில் வடபழநி ஆண்டவரை தரிசிக்க பக்தர்கள் திரளாக காவடி எடுத்து வந்ததால் வடபழநியே அதிர்ந்தது.பல பெரியவர்களுடன் நிறைய சிறுவர்களும் காவடி சுமந்து வந்தனர்,பக்தர் ஒருவர் தனது மார்பில் பலகைகைப் போட்டு அதன் மீது உரல் வைத்து அதில் ஏழு பெண்களைக் கொண்டு மஞ்சள் இடித்து வழிபாடு செய்தார்.ஒரு பக்தர் முதுகில் இரும்பு கொக்கியை மாட்டி அதன் மறுமுனையை உரல் கல்லுடன் இணைத்து இழுத்துச் சென்றார் இதே போல இரும்பு கொக்கி மாட்டி விநாயகர், முருகன் தேர்களை பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.காவடி சுமந்து வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் குளிர்பானம் நீர்மோர் வழங்கினர் சிலர் அவரது பாதங்களை தண்ணீரில் நனைத்து குளிர்வித்தனர்.பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிறைய பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.திரும்பிய பக்கமெல்லாம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை அதிரச்செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மார் 05, 2025 14:56

கடவுளில்லை இல்லவேயில்லை. கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியாரை தூக்கி வைத்துக் கொண்டாடும், சானாதனத்தை எதிர்க்கும் திராவிடமாடலுக்கு சவால்.


shyamnats
பிப் 14, 2025 08:56

இந்த பக்தி மய வளர்ச்சி சரி, ஆனால் தங்கள் இந்து மதத்தை ஆதரிக்காத, ஒதுக்குகிற, தாக்குகின்ற கட்சிகளை தேர்தல்களில் வாக்களிக்கும் போது நினைவில் கொண்டு ஒதுக்க வேண்டும். படிக்கிறது ராமாயணம், வாக்களிப்பது ராமரை படத்தை செருப்பால் அடிப்பேன், சனாதனம் ஒழிப்பேன் எனும் கட்சிகளுக்கா ? சிந்தியுங்கள்


Jayaraman Rangapathy
பிப் 11, 2025 17:07

ஓம் முருகா சனாதனம் தழிக்கிறது. எங்கும் பக்திமயம்.


Karthik
பிப் 11, 2025 18:41

எஸ்.. திஸ் கிரெடிட்ஸ் ஆல் கோஸ் டூ ஒன் அண்ட் ஒன்லி கொசு ஒழிப்பேன் கட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை