உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா /  வடிகாலுக்காக ஆக்கிரமிப்பு அகற்றி அகலமாக மாறிய ரோடு --* பழையபடி மாறாமல் கண்காணிக்க எதிர்பார்ப்பு

 வடிகாலுக்காக ஆக்கிரமிப்பு அகற்றி அகலமாக மாறிய ரோடு --* பழையபடி மாறாமல் கண்காணிக்க எதிர்பார்ப்பு

ராஜபாளையம், ராஜபாளையத்தில் மழை நீர் வடிகாலுக்காக ரோட்டின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் அகற்றிய நிலையில் மீண்டும் பழையபடி மாறாமல் இருக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜபாளையம் மேற்கு பகுதியில் முடங்கியாறு மெயின் ரோட்டுக்கு இணையாக அகலமான ரோடாக மாடசாமி கோயில் மெயின் ரோடு அமைந்துள்ளது. கூட்ட நெரிசல், திருவிழா, போக்குவரத்து தடை போன்ற பிரச்சனையான காலங்களில் மதுரை ரோட்டில் இருந்து மாற்று வழியாக காந்தி சிலை வழியாக நீதிமன்றம் வழியே பஞ்சு மார்க்கெட்டிற்கு செல்ல ஒரே பிரதான சாலையாக உள்ளது. இரண்டு பக்கமும் நடை பாதை ஒதுக்கி 50 அடி அகலம் இருந்த ரோடு நாளடைவில் இரண்டு பக்கமும் குடியிருப்பு வாசிகள், கடைகளால் ஆக்கிரமிப்பிற்கு வந்தது. இதனால் மற்ற சாலைகள் போல் நெருக்கடிக்கு உள்ளாகியது. இந்நிலையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மழைநீர் வடிகாலுக்காக பணிகள் மாடசாமி கோவில் மெயின் ரோட்டில் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஒருசில இடங்களில இப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள தடைகளை அகற்றி மண் ரோட்டில் முழுமையாக ரோடு அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத படி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை