பேட்டரி விலையை உயர்த்துகிறது ஆப்பிள்
'ஆப்பிள்' நிறுவனம், அதன் 'வாரண்டி' காலத்துக்கு பிறகான அனைத்து சாதனங்களின் பேட்டரி விலையையும் அதிகாரப்பூர்வமாக உயர்த்தி அறிவித்துள்ளது.இதனால், 'ஐபோன், ஐபேடு, மேக்' போன்ற ஆப்பிள் சாதனங்களின் வாரண்டி காலம் முடிந்த பிறகு, பேட்டரியை மாற்ற வேண்டும் எனில், கூடுதல் விலை கொடுக்க வேண்டியதிருக்கும். கிட்டத்தட்ட 20 டாலர் அதாவது, 1,640 ரூபாய் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த விலை உயர்வு, மார்ச் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என தெரிகிறது.