உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / ஊழல் இல்லாத நிர்வாகம் அரசின் அதிரடி சரியானதே!

ஊழல் இல்லாத நிர்வாகம் அரசின் அதிரடி சரியானதே!

தமிழகத்தில் 2024- - 2025ம் நிதியாண்டில் லஞ்ச புகார்கள் தொடர்பாக, 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, லஞ்சம் வாங்கிய, 6 81 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இத்தகவலை மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், லஞ்சம் பெற்ற, 126 அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே, 'லஞ்ச, லாவண்யம் இல்லாத ஆட்சி அமைப்போம், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்கும்' என, தற்போது முதல்வராக இருக்கும் விஜய் அ றிவித்தார். நிச்சயமாக அந்த வாக்குறுதியை செயல்படுத்துவார் என, பொதுமக்கள் நம்பியதால், தேர்தலில் அவருக்கு அமோக வெற்றி கிடைத்தது. அதுமட்டுமின்றி, முதல்வராக பதவியேற்ற பின் பேசிய விஜய், 'மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன். என் ஆட்சியில் உள்ளவர்கள் யாரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடவும் அனுமதிக்க மாட்டேன்' என்றும் உறுதி அளித்தார். அந்த உறுதிமொழியை காப்பாற்றும் வகையில், சமீப நாட்களாக ஊழலை தடுக்க அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதில், லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் பறிமுதல் ஆகியுள்ளதுடன், அதிகாரிகள் பலர் மீதும், 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, லஞ்சம் வாங்கி குவிக்கும் வகையில், கூடுதலான திட்ட மதிப்பீடுகளுடன் கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட பல துறைகளின் டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் யாரும் லஞ்சம் வாங்காத வகையில், டெண்டர் நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது, மக்கள் மத்தியில் ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், கைநீட்டும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக, 'வாட் ஸாப்' எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் அறிவிக்கப் ப ட்டுள்ளன. அத்துடன், 'இந்த விபரங்களை அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்' என்றும், அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் பணி ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அ தற்குள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும். பொதுமக்களும் இ - சேவை மற்றும் இணையவழி சேவைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதை பயன்படுத்த முடியாத பாமர மக்களுக்கு உதவ, பிரத்யேக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே உள்ள நேரடி தொடர்பை குறைத்தாலே லஞ்சம் குறையும். மேலும், லஞ்சம் வாங்கி சிக்குவோர் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரி, கையும் களவுமாக சிக்கி விட்டால், அவருக்கு எதிராக வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் வரை, அரசு தரப்பில், பாதி சம்பளம் வழங்குவது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கைகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். லஞ்சத்தை ஒழித்துக்கட்ட அரசு எடுத்துள்ள இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கு, பொதுமக்களும் பெருமளவு ஆதரவு தர வேண்டும். தங்களின் வேலைகள் நடந்தால் போதும் என கருதி, லஞ்சம் கொடுக்க முன்வருவதை தவிர்க்க வேண்டும். தாமதமாகும் பணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்யும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். அடுத்தடுத்து பல கட்டுப்பாடுகள் விதித்தால் மட்டுமே, லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியும். இதை முதல்வர் விஜய் அரசு தொடர்ந்து செய்யும் என, எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

karthikeyan
ஜூலை 20, 2026 22:15

தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்


அரசு
ஜூலை 20, 2026 17:23

லஞ்சத்தை முழுவதும் ஒழிப்பது மிகவும் கடினம். ஏனெனில் நாம் அனைவரும் நீண்ட காலமாக பழகி விட்டடோம். முழுக்க ஒழித்து விட்டால் மகிழ்ச்சி தான். அதே சமயம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், புதிய திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


வில்லிபுத்தூரான்
ஜூலை 20, 2026 16:10

விளம்பரச் சத்தம் அதிகம்.அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சிக்காரரைக் கூட நியமிக்காமல் காசு.கொடுத்தவருக்கு மட்டும் பதவி கொடுத்துள்ளனர்.தவெக ஆட்சியிலும் இலஞ்சம் புழங்குகிறது முதலில் இலஞ்ச ஒழிப்புத் துறையை சரி செய்ய வேண்டும்.


Arul. K
ஜூலை 20, 2026 15:46

சரியான முன்னெடுப்பே. மேலும் துரிதப்படுத்தவேண்டும்


Balamurugan
ஜூலை 20, 2026 15:02

ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் லஞ்சம் வாங்கிய மின்சார துறையின் AE ஐ கையும் களவுமாக அலுவலகத்திலேயே வெள்ளிக்கிழமை அன்று பிடித்தார்கள் ஆனால் ஞாயிறு காலை ஜாமினில் வெளிவந்து விட்டார். விசாரித்ததில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து வெளியே வந்துள்ளதாக தகவல். லஞ்சம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளை ஜாமினில் வெளியே விடும் நீதிபதிகளை எப்படி தண்டிப்பது என்பதை இந்த அரசு யோசித்தால் நன்றாக இருக்கும். ஆதாரத்தோடு பிடிபட்டவர்களை குறைந்தது 15 நாட்களாவது ரிமாண்ட் செய்து சிறையில் தள்ளவேண்டும்.


sundaran manogaran
ஜூலை 20, 2026 14:33

பொதுமக்களும் தைரியமாக முன் வந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். லஞ்சத்துடனே வாழ்ந்து பழகிவிட்ட அரசு ஊழியர்கள் அவ்வளவு சீக்கிரம் லஞ்சத்தை விட்டு வந்து விடமாட்டார்கள். மக்கள்தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.தங்கள் குழந்தைகளாவது லஞ்ச ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் வாழ சிந்திக்க வேண்டும்


JeevaKiran
ஜூலை 20, 2026 12:26

இத்தனை காலமாக ஒரு நடவடிக்கையையும் எடுக்காத லஞ்ச ஒழிப்பு துறைமீது தான் முதலில் நடவடிக்கை எடுக்கணும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இந்த லஞ்ச ஒழிப்பு துறை எத்தனை லஞ்சம் வாங்கியதோ?


Sundhararajan Krishnan
ஜூலை 20, 2026 12:08

Too early to comment Let us wait and see.


chinnamanibalan
ஜூலை 20, 2026 11:18

தமிழகத்தில் 1962 ல் நடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி முதல் இன்று வரை பல்வேறு ஆட்சிகளை நான் பார்த்து இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில், அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் கையூட்டு இல்லை என்று கூறலாம். அதன் பின்னர் நடந்த திமுக, அதிமுக ஆட்சியில் கூட 1990 வரை மிகப் பெரிய அளவில் ஊழல் புகார் இல்லை என்றே கூறலாம்‌. ஆனால் 1991 ல் தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து லஞ்சம் பேசு பொருளாக மாறியது. அதன் பின்னர் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் மாறி மாறி இருந்து கொண்டு, கோடிகளை குவிக்க ஆரம்பித்தன. விளைவு 35 ஆண்டுகளாக தமிழக அரசு நிர்வாகம் ஊழலில் ஊறித் திளைத்தது. திராவிட கட்சிகளின் 35 ஆண்டு கால ஊழல் ஆட்சிக்கு விஜய் முடிவுரை எழுதி இருக்கிறார். இது மிகவும் பாராட்டுக்கு உரியது. இந்த நிலை தொடர வேண்டும். ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இனி லஞ்சம் பெற மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்!


BHARATH
ஜூலை 20, 2026 14:39

என்ன முடிவுரை??? வக்கீல் நியமன ஊழல் என்ன ஆச்சு??? அப்புறம் அறநிலைய துறை ஊழல் என்ன ஆச்சு??? என்னோட ரெண்டு கேள்விக்கு நீ ஒழுங்கா பதில் சொல்லு?


KRISHNAN R
ஜூலை 20, 2026 10:41

நன்றி, அதே நேரத்தில் ஊடக, துறையையும் சுத்தம் செய்வது குறித்து ஆலோசனை, நடவடிக்கை தேவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை