உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / ஊரக வேலை உறுதி திட்டம்; மாற்றங்கள் அவசியமே!

ஊரக வேலை உறுதி திட்டம்; மாற்றங்கள் அவசியமே!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கடந்த, 2005ல் அமல்படுத்தியது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலான இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத் திட்டத்தின் பெயரை, 'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' அதாவது வி.பி.,- ஜி ராம் -ஜி என பெயரை மாற்றி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு, 100 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கும் நிலையில், புதிய மசோதா 125 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது. இப்போதைய திட்டத்துக்கான முழு நிதியையும், மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின்படி, மத்திய அரசும், மாநில அரசுகளும், 60:40 என்ற சதவீதத்தில், திட்டத்திற்கான நிதி சுமையை ஏற்க வேண்டும். அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்கள் மட்டும், 10 சதவீத நிதி வழங்கினால் போதும். ஊரக வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில், விவசாய பணிகள் தீவிரமாக நடைபெறும் கால கட்டங்களில், இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை, 60 நாட்கள் வரை மாநில அரசுகள் நிறுத்தி வைக்கலாம். புதிய ஊரக வேலை திட்டப்பணிகள், விக்சித் பாரத் தேசிய ஊரக கட்டமைப்பு திட்டத்துடன் இணைக்கப்படும். குறிப்பாக, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், ஊரக உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான கட்டமைப்பு பணிகள், மோசமான காலநிலையை மட்டுப்படுத்தும் பணிகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் எந்தவொரு நபரும், இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் அந்த நபருக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ஆரம்பம் முதல் விமர்சித்து வந்தாலும், அதை ரத்து செய்தால், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என, அந்தத் திட்டத்தை தொடர்ந்தது. மேலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை இத்திட்டம் பாதுகாக்கிறது என்பதையும் ஏற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில், புதிய மசோதா வாயிலாக, தற்போது மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு, 60:40 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு கூடுதலாக, 50,000 கோடி ரூபாய் வரை செலவு கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மத்திய அரசால் திட்டம் கட்டுப்படுத்தப்படும் போது, நாங்கள் ஏன், 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் வரும் நாட்களில் கேள்வி எழுப்பலாம். தற்போது பெரும்பாலான மாநில அரசுகளின் நிதி நிலைமை மோசமாகவும், அவற்றின் நிதி அதிகாரங்கள் குறைந்தும் இருப்பதால், அவை தங்களுக்கான 40 சதவீத பங்கை செலுத்த முடியாமல் தவிக்கும் நிலைமை உருவாகும். ஏற்கனவே மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட சில திட்டங்களில், பல மாநிலங்கள் தங்களின் 50 சதவீத பங்கை செலுத்த முடியாமல் திணறி வருவதால், அந்தத் திட்டங்களின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. அது போன்ற நிலைமை இந்த திட்டத்திற்கும் உருவாக வாய்ப்பு உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்பது உண்மையே. அவற்றை சரிசெய்வதும், அதில் மாற்றங்கள் செய்வதும் அவசியமே. அதேநேரத்தில், அந்த மாற்றங்களால் திட்டம் சீர்குலைந்து விடக்கூடாது. அது நடக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சந்திரன்
டிச 22, 2025 21:13

இதுநாள் வரை இந்த திட்டத்திற்கான செலவை மத்திய அரசு செய்தது திராவிட மாடல் புள்ளிங்கோ காசு பாத்தது10பர்சன்ட். இப்போது 40சதவீதம் மாநில அரசு அழனும்


spr
டிச 22, 2025 20:20

மற்ற மாநிலங்களில் எப்படி இத்திட்டம் நிறைவேற்றப்ப டுகிறது என்பதைக் குறித்து எவரும் சொல்லவில்லை


அப்பாவி
டிச 22, 2025 19:41

அப்பிடியாவது ரெண்டு கோடி வேலை குடுத்திரலாம்னு ஐடியா...


kulanthai kannan
டிச 22, 2025 19:06

மாநில அரசுகள் இனியாவது தேவையற்ற வீண் இலவசங்களை க் குறைத்து இது போன்ற திட்டங்களுக்கு மட்டுமே செலவிட வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.


SUBBU,MADURAI
டிச 22, 2025 18:39

இது ஒரு தோல்வியடைந்த திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 60 ஏக்கர் உள்ள எங்களின் நிலத்தில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் வெறும் ஐந்து ஏக்கர் நிலத்தில் மட்டும் எங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு சாப்பாட்டுக்கு மட்டும் என் தந்தை பயிரிட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்குப் பின் கண்டிப்பாக நான் விவசாயம் பார்க்க வாய்ப்பு இல்லை காரணம் என்னை அவர் கூட மாட விவசாயத்தில் ஈடுபட வைக்காமல் என்னை உயர் படிப்பு படிக்க வைத்து விட்டார். இப்போது எங்கள் நிலத்தை வாங்க புரோக்கர்கள் பலரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் பல விவசாயிகளுக்கும் எங்களை போன்ற நிலைமைதான்.


Sri Kumaran
டிச 22, 2025 14:27

வீட்டு சாப்பாட்டு ரோடு ல சாப்டு மரத்துக்கு அடில தூங்கறாக்கு சம்பளம் ஒரு கேடு


கனோஜ் ஆங்ரே
டிச 22, 2025 12:01

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்? ஆனால், இத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை எதற்கு எடுத்தீர்கள்? காந்தி என்னய்யா உங்களுக்கு துரோகம் பண்ணார்? அவர் பெயர் இருந்தா என்னய்யா?


vivek
டிச 22, 2025 13:56

காந்தி மேல கணோஜுக்கு எவளோ பாசம்


guna
டிச 22, 2025 13:58

நீ வாங்கும் இருநூறு நோட்டில் காந்தி படம் இருக்கே


நாஞ்சில் நாடோடி
டிச 22, 2025 14:25

காந்தி செய்ததெல்லாம் இந்தியாவுக்கு துரோகம்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிவினை. சிறுபான்மையினருக்கு அதிக உரிமை. நவகாளியில் முஸ்லீம்கள் இந்துக்களை கொன்று ரத்த ஆறு ஓடியது


Karunai illaa Nidhi
டிச 22, 2025 17:39

கோட்ஸே கொண்டாடப்பட வேண்டிய மகத்தான தேசபக்தன். காங்கிரஸ் அயோக்கியர்கள் வரலாறை திரித்து எதோ பூந்தி மட்டுமே சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரியும் கோட்ஸே தீவிரவாதி மாதிரியும் சித்தரித்து விட்டார்கள் கபோதிகள். காலம் மாறும் கோட்ஸேவும் கொண்டாடப்படுவார் பூந்தி மக்களால் புறக்கணிக்கப் படுவார். அதற்கு இந்த திட்டம் பிள்ளையார் சுழி போடட்டும்


Arul
டிச 22, 2025 09:26

இந்த திட்டத்தால் அரசுப் பணம் 1.5 லட்சம் கோடி செலவு.. எல்லா வேலைகளும் இப்போ எளிமையாக்க இயந்திரங்கள் வந்துவிட்டன அதை பயன் படுத்தலாம் .. இந்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மானியமாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கலாம்... இது மக்களின் பொருளாரத்திற்கு உதவும்.


maan
டிச 22, 2025 08:34

இந்த திட்டத்தை இழுத்து மூடினால் அரசுப் பணம் 1.5 லட்சம் கோடி மிச்சமாகும். குப்பையான திட்டம் இது.


குருநாதன் ஜே மதுரை
டிச 22, 2025 07:22

மாற்றம் ஒன்றே மாறாதது. இதை இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள்