வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அரசு தரவு நுகர்வோர் குறியீடு இரண்டு விழுக்காடுக்குள் இருக்கிறது என சொல்கிறார்கள்.ஆனால் விலைவாசி ஏறி கொண்டே இருக்கிறது குறிப்பாக மருந்து பொருட்கள் சாமானியர் சாப்பிடும் கடலை மிட்டாய் கூட நாற்பது விழுக்காடு விலை உயர்ந்து விட்டது
கோமதி இனிமேல் நீ கடலை மிட்டாய் தின்பதற்கு பதில் திருநெல்வேலியின் இருட்டுக் கடை அல்வாவை சாப்பிடு உன் கோபம் தணிந்து விடும்.
தொழில் துறை மற்றும் அந்நிய வர்த்தக முன்னேற்றம் முக்கியம் என்றாலும் கூட, அது மட்டுமே பட்ஜெட்டாக இருக்க கூடாதே. மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை சற்று எளிதாக்க சில அம்சங்கள் இருந்திருக்க வேண்டும். அதற்காக வேறு சிலவற்றை விட்டு கொடுக்கலாம். உணவு பொருட்களின் விலையை குறைக்க விவசாயிகளின் குறைந்த பட்ச விலை பாதிக்காத வகையில் சந்தையில் கூடுதல் பொருட்கள் விநியோகம் ஆக ஏற்பாடு பண்ணனும். அதே போல பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரூபாய் மதிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தனும், அதில் தலையிட போவதில்லை என ஒதுங்க கூடாது.
வளர்ச்சிக்கு வெறும் வழியை மட்டும் காட்டும்?? அப்போ வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்ல?? வெறும் வழியை மட்டும் காட்டி கொண்டு இருந்தால்? ஆட்சியாளர்கள் வெளியேறுவதறகான வழியை மக்கள் காட்டி விடுவார்கள்.
டாஸ்மாக் அறிவு
நாங்க சத்தியமா நம்பிட்டோம்... இது ஒன்னும் புதுசில்லையே எங்களுக்கு....
சீனுவுக்கு குடும்பத்திற்கும் டெய்லி இருநூறு வந்தா போதும்
யாரோட வளர்ச்சிக்கு?
இது தெரியாம நீ எதுக்கு லண்டன் சந்துல சுத்திக்கிட்டு இருக்கே
ஓ அப்படியா
தற்குறிகளுக்கு பொருளாதார பாடம் எடுக்க முடியாது எனவே இப்படித்தான் கேட்பார்கள்...
பிரதமர் மோடியின் கீழ் பாரதத்திற்கு இது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகும். இந்த இடைக்கால இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டது. இந்தியா அமெரிக்க கூட்டு அறிக்கையின் படி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு $30 டிரில்லியன் அமெரிக்க சந்தை திறக்கிறது பரஸ்பர அமெரிக்க வரிகள் 18% ஆக குறைக்கப்பட்டது பொதுவான மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விமான பாகங்கள் மீதான வரிகள் பூஜ்ஜியமாக உள்ளன ஜவுளி, ஆடைகள், தோல், காலணிகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கான பெரிய லாபங்கள் பிரிவு 232 விலக்குகள், ஆட்டோ பாகங்கள் ஒதுக்கீடு மற்றும் முக்கிய மருந்து ஆதாயங்கள் பாதுகாக்கப்பட்டன உணர்திறன் வாய்ந்த விவசாயம் மற்றும் பால் பொருட்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன, விவசாயிகளின் நலன்களில் சமரசம் இல்லை MSME கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைகள் ஏற்றுமதிக்கு வலுவான உந்துதலாகும். பிரதமர் மோடி மற்றும் பியூஷ் கோயல் இருவரால் இயக்கப்படும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இது ஒரு உண்மையான திருப்புமுனை.
எதிர்க்கட்சிகள் பாராட்ட போவதில்லை. ஆளுங்கட்சியும் குறை சொல்லப் போவதில்லை. அரசியலில் இதுதானே எழுதப்படாத விதிமுறை ?