குழந்தை தத்தெடுப்பில் பத்திரம் போதுமானதா?
* கொலை வழக்கில் விசாரணை கைதியை காலவரையின்றி ஜாமினில் விடாமல் சிறையில் அடைக்க முடியுமா? கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒன்பது மாதமாக ஜாமின் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அலகாபாத் ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். விசாரித்த கோர்ட், அரசியல் சாசன சட்டப்பிரிவு, 21ன் கீழ் ஒருவருக்கு அளிக்கப்பட்ட உரிமையை மீறப்பட்டதாக ஆகிவிடும் என்று கூறி அவருக்கு ஜாமின் வழங்கியது. * குழந்தையை தத்தெடுக்க பத்திரத்தில் எழுதிக்கொடுத்தால் போதுமானதா? போதாது. ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956ன் கீழ், சம்பந்தப்பட்ட குழந்தையை உண்மையில் கொடுப்பதும், பெறுவதுமான சடங்கு ஒரு கட்டாயமான அம்சமாகும் என்றும், அது வெறும் சம்பிரதாயமானதல்ல என்றும் ராஜஸ்தான் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கமும் இதற்கான விதிகளை வகுத்துள்ளது. - வக்கீல் சண்முகம் ரேஸ்கோர்ஸ்.