உள்ளூர் செய்திகள்

ஹாஷிம் உமர் பௌண்டேசன் மடிக்கணினி வழங்கல்

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் 05ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சிங்கள செய்தி பிரிவும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் கொழும்பு ரத்னா பேர்ல் கிராண்ட் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்கை லங்கா சிங்கள செய்திப் பிரிவின் பிரதி முகாமையாளர் ஆஷிகா பர்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹாஷிம் உமர் பவுண்டேசனின் தலைவர் ஹாஷிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வில் ஸ்கை லங்கா சிங்கள செய்திப் பிரிவின் உத்தியோகபூர்வமான இலச்சினை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் ஸ்கை தமிழ் ஊடக செய்தி சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஹாஷிம் உமரால் மடிக்கணினி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !