பிரான்சில் நவராத்திரி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள இந்தியர்கள் நவராத்திரி விழாவைக் கொண்டாடினர். நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர். இந்த விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.