குவைத்தில் இந்திய தூதர் ஆய்வு
குவைத்: குவைத்தின் ஜலீப் அல் சுயூக் பகுதியில் பி.எல்.எஸ். நிறுவனத்தின் சார்பில் இந்திய தூதரக சேவைகள் வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா ஆய்வு செய்தார்.மேலும் அங்கு இந்திய தொழிலாளர்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.இந்த முகாமின் மூலம் பொதுமக்கள் பலர் பயனடைந்தனர்.- நமது செய்தியாளர், காஹிலா.