துபாய் சீக்கிய குருத்வாராவில் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் குருத்வாரா நிர்வாகிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அமீரக வர்த்தகப் பிரமுகர்களுக்கு வரவேற்பு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா