பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா
அமெரிக்காவில் முதன் முதலாகப் பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா ஆகஸ்ட் 5-ஆம் நாள் திங்கட்கிழமை அன்று இனிதே நடைபெற்றது. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கமும், பென்சில்வேனியா தமிழ்ப் புத்தகக் குழுவும், வலைத்தமிழ் ஊடகமும் இணைந்து இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். க.காமராசு, தலைமைப் பயிற்சியாளர், (உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்), விஜய் மணிவேல், (தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA), மருத்துவர் விஜய் ஜானகிராமன், (ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்), கொழந்தவேல் இராமசாமி (வாசிங்டன், டி.சி.), ச. பார்த்தசாரதி, (ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்), வாசுதேவன் வரதராஜன், மகேந்திரன் சுந்தர்ராஜ், விஸ்வநாதன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இத்தொடக்க விழாவின் முழு நேரக்காணொலியைக் காண: https://www.youtube.com/watch?v=YUDx8Zen-Cw - நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்