sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கடகம்

/

கடகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்


மாத ராசி பலன் : கடகம்
10 பிப் 2024

முந்தய மாத ராசி பலன்

rasi

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: சந்திர பகவானை ராசிநாதனாகவும் குருபகவானை நட்சத்திர நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் கேது பகவானால் யோகம் உண்டாகும். விருப்பம் நிறைவேறும். முயற்சி லாபமாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். எட்டாம் இடத்தில் சனிபகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல்ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். இயந்திரப் பணியாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனப் பயணத்திலும் கவனம் தேவை. சுயதொழில் செய்பவர்கள் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். அரசுவழியில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. உங்களுக்கு எதிராக சிலர் சதி புரிவார்கள் என்பதால் எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் மிக விழிப்புணர்வு அவசியம். பணியாளர்கள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். ஏழாம் இடத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இணைந்திருப்பதால் எதிர்பாலினரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் ஆசைகளுக்கு இடம் கொடுப்பதால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும். குரு பகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெண்கள் தங்களின் உடல்நிலையோடு,  கணவரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நட்புகளிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. பாக்கிய ராகுவால் வெளிநாட்டு தொடர்புகள் வெற்றியளிக்கும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். மாதத்தின் முற்பகுதியில் சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் பிற்பகுதியிலும் இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 9
அதிர்ஷ்ட நாள்: பிப். 20,21, மார்ச் 2,3,11,12
பரிகாரம்: கண்ணுடைய நாயகியை வணங்க வளம் கூடும்.

பூசம்: தொழில், கர்ம காரகனான சனிபகவானின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை, தைரியம் கூடுதலாகவே இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் எட்டாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். சூரியபகவானும் அங்கே இணைந்திருக்கிறார் என்றாலும் இருவருமே மறைவு பெற்றிருப்பதால் நீங்கள் செய்யும் தொழிலில் உங்கள் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும். பணியில் நெருக்கடி தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். பொதுவாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்வில் தடை, நெருக்கடி இருக்கும் என்பதால் இக்காலத்தில் வாழ்க்கைத்துணையுடன் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபத்திற்கு இடம் தராமல் எந்த ஒன்றையும் பரஸ்பரம் பேசி தீர்வு காண்பது நல்லது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால்  முயற்சி நிறைவேறும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும்.  வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இக்காலத்தில் சில சங்கடங்கள் தோன்றும். குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் வழியாக ஆதாயம் உண்டாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் படிப்பின் மீது முழுமையான அக்கறை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 10
அதிர்ஷ்ட நாள்: பிப்.17,20,26, மார்ச் 2,8,11
பரிகாரம்: தினமும் நவகிரகங்களை வழிபடுவது நன்மை தரும்.

ஆயில்யம்: வித்யா காரகனான புதபகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனித்திறமையும், ஆளுமையும் இருக்கும். சூழலைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதை அடைய வேண்டுமோ அதை அடைவதற்கு முயற்சித்து அதில் வெற்றி காண்பீர்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுபகவானும் முயற்சியை வெற்றியாக்குவார். குரு பகவானின் பார்வை பணவரவை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றிடக்கூடிய நிலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியான சூழலை உண்டாக்கும். தாய்வழி உறவுகளால் அனுகூலம் அதிகரிக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி,  சூரியனும் உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும் இடத்தில் இல்லை என்பதால் அரசு வழியிலான முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள்  மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விளைச்சல் அமோகமாகும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 11,12.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14,20,23, மார்ச். 2,5
பரிகாரம் கால பைரவரை வணங்க சங்கடம் யாவும் நீங்கும்.


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கடகம்

/

கடகம்

மாத ராசி பலன்

மாத ராசி பலன் : கடகம்
10 பிப் 2024


rasi

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: சந்திர பகவானை ராசிநாதனாகவும் குருபகவானை நட்சத்திர நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் கேது பகவானால் யோகம் உண்டாகும். விருப்பம் நிறைவேறும். முயற்சி லாபமாகும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். எட்டாம் இடத்தில் சனிபகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உடல்ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். இயந்திரப் பணியாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனப் பயணத்திலும் கவனம் தேவை. சுயதொழில் செய்பவர்கள் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். அரசுவழியில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. உங்களுக்கு எதிராக சிலர் சதி புரிவார்கள் என்பதால் எல்லாவற்றிலும் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் மிக விழிப்புணர்வு அவசியம். பணியாளர்கள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். ஏழாம் இடத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இணைந்திருப்பதால் எதிர்பாலினரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் ஆசைகளுக்கு இடம் கொடுப்பதால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும். குரு பகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பெண்கள் தங்களின் உடல்நிலையோடு,  கணவரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம். புதிய நட்புகளிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. பாக்கிய ராகுவால் வெளிநாட்டு தொடர்புகள் வெற்றியளிக்கும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். மாதத்தின் முற்பகுதியில் சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் பிற்பகுதியிலும் இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 9
அதிர்ஷ்ட நாள்: பிப். 20,21, மார்ச் 2,3,11,12
பரிகாரம்: கண்ணுடைய நாயகியை வணங்க வளம் கூடும்.

பூசம்: தொழில், கர்ம காரகனான சனிபகவானின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை, தைரியம் கூடுதலாகவே இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் எட்டாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். சூரியபகவானும் அங்கே இணைந்திருக்கிறார் என்றாலும் இருவருமே மறைவு பெற்றிருப்பதால் நீங்கள் செய்யும் தொழிலில் உங்கள் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும். பணியில் நெருக்கடி தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். பொதுவாக உங்கள் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்வில் தடை, நெருக்கடி இருக்கும் என்பதால் இக்காலத்தில் வாழ்க்கைத்துணையுடன் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபத்திற்கு இடம் தராமல் எந்த ஒன்றையும் பரஸ்பரம் பேசி தீர்வு காண்பது நல்லது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால்  முயற்சி நிறைவேறும். குருபகவானின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும்.  வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு இக்காலத்தில் சில சங்கடங்கள் தோன்றும். குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகள் வழியாக ஆதாயம் உண்டாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் படிப்பின் மீது முழுமையான அக்கறை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 10
அதிர்ஷ்ட நாள்: பிப்.17,20,26, மார்ச் 2,8,11
பரிகாரம்: தினமும் நவகிரகங்களை வழிபடுவது நன்மை தரும்.

ஆயில்யம்: வித்யா காரகனான புதபகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனித்திறமையும், ஆளுமையும் இருக்கும். சூழலைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் அனுகூலமாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதை அடைய வேண்டுமோ அதை அடைவதற்கு முயற்சித்து அதில் வெற்றி காண்பீர்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுபகவானும் முயற்சியை வெற்றியாக்குவார். குரு பகவானின் பார்வை பணவரவை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றிடக்கூடிய நிலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியான சூழலை உண்டாக்கும். தாய்வழி உறவுகளால் அனுகூலம் அதிகரிக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி,  சூரியனும் உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும் இடத்தில் இல்லை என்பதால் அரசு வழியிலான முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள்  மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விளைச்சல் அமோகமாகும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 11,12.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14,20,23, மார்ச். 2,5
பரிகாரம் கால பைரவரை வணங்க சங்கடம் யாவும் நீங்கும்.

மேலும் மாத ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us