மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மிதுனம்
15 டிச 2025
முந்தய மாத ராசி பலன்

மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..: எடுத்த வேலைகளை வேகத்துடனும் விவேகத்துடனும் நடத்தி வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி முன்னேற்றமான மாதமாகும். உங்கள் லாபாதிபதியும், சத்ரு ஜெய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைப்பதை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி சூரியனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை விட்டு வசதியான வீட்டில் குடியேறுவர். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் வேலைகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ராசியாதிபதி புதன் டிச.25 வரை நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், உங்கள் விரயாதிபதியும் பஞ்சமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். டிச. 21 முதல் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் அவர்களிடம் விலகி இருப்பது நன்மை ஏற்படுத்தும். குடும்பத்தினர் மீது இந்த நேரத்தில் அக்கறை கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 22
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14
பரிகாரம் கோமதி அம்மனை வழிபட குறைகள் யாவும் தீரும்.
திருவாதிரை: எதையும் தனித்து நின்று சாதிக்கும் உங்களுக்கு மார்கழி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் யோகக்காரகன் ராகுவும், கர்ம காரகன் சனியும் உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மைகளை இந்த மாதத்தில் வழங்குவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரி அனுசரணையாக இருப்பார். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். புதிய வாகனம், சொத்து சேரும். தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும்.
செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்தவற்றை சாதித்துக் கொள்ளும் நிலையுடைய இக்காலத்தில் டிச. 21 முதல் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படலாம். புதியவர்களிடம் கவனமாக இருப்பதால் உங்கள் கவுரவம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். தொண்டர்களின் பலம் கூடும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணை மீதும் பிள்ளைகளின் மீதும் அக்கறை கொள்வது உங்களுக்கு நன்மை தரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 23
அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 31. ஜன. 4, 5, 13, 14
பரிகாரம் மாசாணி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகனும் உங்கள் நட்சத்திர அதிபதியுமான குரு மாதத்தின் முற்பகுதியில் இரண்டாம் இடத்திலும், டிச. 22 முதல் ஜென்ம ராசியிலும் வக்கிரமாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்றாலும் உழைப்பிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். சூரியனும், செவ்வாயும் உங்களிடம் வேகத்தையும் துணிச்சலையும் உண்டாக்குவர். ஒரு முயற்சியை எடுத்த பிறகு அடுத்தடுத்து என்று அதில் வெற்றி பெறுவதற்காக நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டாலும் அதை எப்படி சரிசெய்வது என்ற வழி உங்களுக்கு தெரியும். சிலர் தொழிலை விரிவு செய்வதற்காக வேறு இடத்திற்கு மாற்றுவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்ய சனியும், ராகுவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தைரியத்துடன் செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய அளவிற்கு உங்களின் செல்வாக்கு உயரும். பலம் உண்டாகும். உறவுகள் நண்பர்கள் மத்தியில் கவுரவமாக நடை போடக் கூடிய நிலை உண்டாகும். பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். டிச. 25 வரையும் அதன் பிறகு ஜன.11 முதலும் ராசிநாதன் புதன் உங்கள் கனவுகளை நனவாக்குவார். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 24.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 12, 14.
பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மாத ராசி பலன் : மிதுனம்
15 டிச 2025

மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..: எடுத்த வேலைகளை வேகத்துடனும் விவேகத்துடனும் நடத்தி வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி முன்னேற்றமான மாதமாகும். உங்கள் லாபாதிபதியும், சத்ரு ஜெய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைப்பதை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி சூரியனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை விட்டு வசதியான வீட்டில் குடியேறுவர். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் வேலைகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் ராசியாதிபதி புதன் டிச.25 வரை நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், உங்கள் விரயாதிபதியும் பஞ்சமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். டிச. 21 முதல் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் அவர்களிடம் விலகி இருப்பது நன்மை ஏற்படுத்தும். குடும்பத்தினர் மீது இந்த நேரத்தில் அக்கறை கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 22
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14
பரிகாரம் கோமதி அம்மனை வழிபட குறைகள் யாவும் தீரும்.
திருவாதிரை: எதையும் தனித்து நின்று சாதிக்கும் உங்களுக்கு மார்கழி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் யோகக்காரகன் ராகுவும், கர்ம காரகன் சனியும் உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மைகளை இந்த மாதத்தில் வழங்குவர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரி அனுசரணையாக இருப்பார். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். புதிய வாகனம், சொத்து சேரும். தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும்.
செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்தவற்றை சாதித்துக் கொள்ளும் நிலையுடைய இக்காலத்தில் டிச. 21 முதல் எதிர்பாலினரால் பிரச்னை ஏற்படலாம். புதியவர்களிடம் கவனமாக இருப்பதால் உங்கள் கவுரவம் உயரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். தொண்டர்களின் பலம் கூடும். சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணை மீதும் பிள்ளைகளின் மீதும் அக்கறை கொள்வது உங்களுக்கு நன்மை தரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 23
அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 31. ஜன. 4, 5, 13, 14
பரிகாரம் மாசாணி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞானக்காரகனும் உங்கள் நட்சத்திர அதிபதியுமான குரு மாதத்தின் முற்பகுதியில் இரண்டாம் இடத்திலும், டிச. 22 முதல் ஜென்ம ராசியிலும் வக்கிரமாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்றாலும் உழைப்பிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். சூரியனும், செவ்வாயும் உங்களிடம் வேகத்தையும் துணிச்சலையும் உண்டாக்குவர். ஒரு முயற்சியை எடுத்த பிறகு அடுத்தடுத்து என்று அதில் வெற்றி பெறுவதற்காக நகர்ந்து கொண்டே இருப்பீர்கள். வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டாலும் அதை எப்படி சரிசெய்வது என்ற வழி உங்களுக்கு தெரியும். சிலர் தொழிலை விரிவு செய்வதற்காக வேறு இடத்திற்கு மாற்றுவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாக்ய சனியும், ராகுவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தைரியத்துடன் செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய அளவிற்கு உங்களின் செல்வாக்கு உயரும். பலம் உண்டாகும். உறவுகள் நண்பர்கள் மத்தியில் கவுரவமாக நடை போடக் கூடிய நிலை உண்டாகும். பணியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். டிச. 25 வரையும் அதன் பிறகு ஜன.11 முதலும் ராசிநாதன் புதன் உங்கள் கனவுகளை நனவாக்குவார். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இணக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 24.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 12, 14.
பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
























